மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் நேற்று இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறைச்சாலையில் இரவு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரை ஜெயிலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் அனுராயபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவராவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.