July 8, 2025
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு   வெளியான அதிர்ச்சி தகவல்
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள் வர்த்தகம்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

Jan 16, 2024

வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிநாட்டில் உள்ள ஒருவர் இலங்கையிலிருந்து வட்டி வருமானம், வாடகை வருமானம் அல்லது வங்கிகளில் நிலையான வைப்புத்தொகை மூலம் வருடத்திற்கு 12 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் அவர் கண்டிப்பாக TIN எண்ணை பெற வேண்டும்.

மேலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலங்கை சுங்கத்துடன் கணனி வலையமைப்பில் செயற்படுவதால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான அனைத்து தகவல்களையும் திணைக்களம் பெற்றுக் கொள்கிறது.

எனவே அனைத்து நிறுவனங்களுடனும் வலையமைப்பதன் மூலம் தலைமறைவாக இருக்கும் வரி ஏய்ப்பு செய்பவர்களை அடையாளம் காண முடியும் எனவும் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம்  பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *