தபால் அதிபர் அஞ்சல் ஊழியர்கள் முறைக்கேடாக மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளனர் என்று வெளியிட்ட கருத்துக்கு, தபால் தொழிற்சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷண எதிர்வரும் 9 ஆம் திகதி கருப்புப்பட்டி அணிந்து பணிக்கு வருவோம் என அறிவித்தார்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டது. விசாரணை இல்லாமல் அதிபர் சொன்ன குற்றச்சாட்டுகளை கடுமையாக எதிர்க்கிறோம்.

இதற்கு முன், ஹப்புத்தளையில் நடைபெற்ற விழாவில் தபால் அதிபர் ருவன் சத்குமார தபால் ஊழியர்கள் கைரேகையைப் பதிக்காமல் கோடிக்கணக்கான மேலதிக கொடுப்பனவை பெற்றுள்ளனர் என்றும், தபால் துறையில் நிகழும் பல முறைகேடுகள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here