இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் ஏற்படும் சொத்து இழப்புக்கள் தொடர்பாக அனலைதீவு மீனவர்களால் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்திய மீனவர்களால் அனலைதீவு கடற்பரப்பில் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை மற்றும் இழப்பீடுகள் ஏற்படுகின்றமை தொடர்பில் அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் என்பன இணைந்து ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (24.11.2024) முறைப்பாடு செய்துள்ளனர்.
இம் முறைபாட்டினை அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜோன் பொஸ்கோ, வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா ஆகியோர் இம்முறைப்பாட்டினை அனலைதீவு மீனவர்கள் சார்பில் மேற்கோண்டனர்.









