சீனாவின் பல்கலைகழகமொன்றில் பணியாற்றிய நான்கு அமெரிக்கர்கள் ஜிலின் மாகாணத்தின் பூங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர்.

இந் நிலையில் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அயோவா கார்னல் கல்லூரியில் பணியாற்றியவர்களே கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர்.

கத்திக்குத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் தனது சகோதரரும் ஒருவர் என அயோவாவின் சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் அடம்ஜப்னெர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரஜைகள் ஆலயமொன்றிற்கு சென்றவேளை நபர் ஒருவர் கத்தியால் தாக்கினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here