யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவும் நாடாளுமன்றத்தில் இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் இனவெறி கருத்துக்களை வெளியிடுவதைத் தடுப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.








