அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவப் பொருட்கள் பலவற்றிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவி வருவதாக அறியக் கிடைத்துள்ளது.

சில வார்டுகளில் பிளாஸ்டர்கள் உள்ளிட்ட அடிப்படை மருந்துப் பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வருமாறு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொற்று அல்லாத நோய் வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் மற்றும் கொலஸ்ட்ரால் மாத்திரைகள் உள்ளிட்ட முக்கிய மருந்துகளின் பற்றாக்குறை காரணமாக, இந்த மருந்துகளை வெளியில் இருந்து வாங்குவதற்கு அதிக அளவு பணம் செலவிட வேண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு சில ஆய்வக சோதனைகளைச் செய்வதற்கு கிட்டத்தட்ட 10,000 ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதாகக் கூறும் நோயாளிகள், கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் இந்த பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை என்றும், சுகாதார அமைச்சகம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here