இபலோகம, வளவ்வேகம பிரதேசத்தில் 37 வயதுடைய நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வளவ்வேகமவில் உள்ள அவரது வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர் நேற்று முன்தினம் இரவு வேறு ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.







