Thursday, July 23, 2026
No menu items!

படுகொலை

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை – 50 CCTV காட்சிகள் ஆய்வு!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் சுமார் 50 CCTV காட்சிகளை ஆய்வு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸ் விசாரணைகளின்படி, தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியும், அவரை தப்பிச் செல்லச் செய்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், தாக்குதலுக்கு பின் வழியிலேயே பிரிந்து இரு தனித்தனியான மோட்டார் சைக்கிள்களில்...

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை!

யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 1ஆம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம்  (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவ்வாறான...

செம்மணி படுகொலைக்கு நீதிகோரி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

செம்மணியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரும் நோக்கில், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பலரை ஈர்த்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு உடனடி விசாரணை மற்றும் நீதிகான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பேரவலத்துடன் கோரப்பட்டு வருகின்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமிற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அஞ்சலி..!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின்  நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை (28/04/2025) மாலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் நகரசபை மண்டபத்தில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு நேற்று (28/04/2025) மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட அகில...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல்..!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் , தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து...

தந்தையை இரும்புக் கம்பியால் தாக்கி கொன்ற மகன்..!

கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு (18/04/2025) இடம்பெற்றுள்ளதாக கிரேண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த...

காதல் உறவால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்..!

மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18/04/2025) பகல் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை...

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை!

பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலை படுகொலையில் ஒரு கைதி கொல்லப்பட்டுள்ளார். கூர்மையான ஆயுதத்தால் குத்தி இந்தக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு கைதி கொலை செய்யப்பட்டுள்ளார், மேலும் இந்தக் கொலையை சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கனேமுல்ல சஞ்சீவ கொலை – சிக்கிய துப்பாக்கிதாரியின் காதலி..!

கனேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த  துப்பாக்கிதாரியின்  காதலி என்று கூறப்படும் ஒரு பெண்ணை மஹரகம பொலிஸார் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர். கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பிறகு, துப்பாக்கிதாரி தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வந்ததாக தெரியவந்துள்ளது. அதற்காக, குறித்த பெண்ணை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல நபர் ஒருவர் மஹரகம...

கணேமுல்ல சஞ்சீவ கொலை பழிவாங்கலா? – வெளியான காரணம்..!

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தின் இலக்கம் 5 ஆம் அறையில், சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ...
- Advertisement -spot_img

Latest News

எல் நினோ தாக்கம் நவம்பரில் உச்சத்தை அடையலாம்

எல் நினோ நிலை தற்போது தீவிரமடைந்துள்ளதாகவும், எதிர்பார்த்ததை விட முன்னதாகவே, அதாவது நவம்பர் மாதத்தில் இலங்கையில் அதன் உச்ச நிலையை அடையக்கூடும் என்றும் சுற்றாடல் அமைச்சர்...
- Advertisement -spot_img