யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவுக்கு அமைவாக 55 வது காலால் படை பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக, தேசியப் பாதுகாப்பு படையினரால் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு கிளிநொச்சி பனங்கண்டி பகுதியில் புதிதாக வீடு ஒன்று நிர்மாணித்து கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி விக்கும் லியனுகே அவர்களினால் இன்றைய தினம் 16.10.2024 வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.










