சுங்கத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ள வேலை-விதி பிரச்சாரம் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அனுமதிப்பது தாமதமாகியுள்ளதாக சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

சுங்க கட்டளைச் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களுக்கு எதிராக சுங்க அதிகாரிகள் நேற்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

உத்தேச வருவாய் அதிகாரசபை சட்டமூலத்திற்கு எதிராக நாளை(04.07.2024) மற்றும் நாளைமறுதினம் (05.07.2024)  தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here