இலங்கை காவல்துறை, அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் உடலில் அணியும் கேமராக்களை பொருத்தத் தீர்மானித்துள்ளது. முன்னோடி முயற்சியாகத் தொடங்கிய இந்த திட்டம், இப்போது நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், பணியில் உள்ள ஒவ்வொரு பொது தொடர்பும் பதிவு செய்யப்படும்.
இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் வகையில், இரு தரப்பினருக்கும் தவறான நடத்தையை கடினமாக்கும்.
தகராறுகள் அல்லது புகார்களில் நம்பகமான ஆதாரங்களை வழங்கும்.
மேலும், தீவு முழுவதும் உள்ள 608 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட உள்ளன. அதிக புழக்கமுள்ள காவல் நிலையங்களில் முதலில் நிறுவும் பணி ஆரம்பமாகும். கைதிகள் தவறாக நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், கண்காணிப்பு வலுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை குழுக்கள் தொடர்ந்து சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வளர்ப்பதில் தொழில்நுட்பம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக அமையும் என்று குறிப்பிடப்படுகிறது.








