இலங்கையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 30 வரை, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்து NCPA-க்கு 7,677 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், கடுமையான பாலியல் சுரண்டல் சம்பவங்கள் 192 என்ற அளவில் இருந்தன. சட்டத்தின் கீழ் வரும் புகார்கள் 6,296, சட்டத்திற்கு உட்படாதவை 1,381. செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 1,176 புகார்கள் பதிவாகியுள்ளன.

சட்டத்தின் கீழ் வரும் புகார்களில், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் 49, குழந்தை தொழிலாளர் சம்பவங்கள் 111, கடத்தல் சம்பவங்கள் 203, டீனேஜ் கர்ப்பம் சம்பந்தப்பட்டவை 62 ஆக உள்ளன.

ஏனையவை சைபர் வன்முறை 102, வீட்டு வன்முறை 38, தற்கொலை முயற்சிகள் 13, கடத்தல் போதைப்பொருள் சம்பவங்கள் தொடர்பாக 83 புகார்கள், இதில் குழந்தைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் 27, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போதைப்பொருள் விற்பனை சம்பவங்கள் 3 பதிவாகியுள்ளன.

களுத்துறை பிரிவுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த பத்மினி வீரசூரிய, சிறுவர்களை போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுத்தும் போக்கு காணப்படுவதாகத் தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வீரசூரிய இந்தக் கருத்தை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here