இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளையும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானத்தை எடுத்துள்ளது.
நேற்றைய தினம் 15.09.2024 இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் கூட்டமானது, தொகுதிக் கிளையின் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது தமிழ்ப்பொது வேட்பாளர் குறித்தான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இந்நிலையில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளரான அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








