யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்திருக்கின்ற இலங்கை வங்கி கிளை இன்று (4/11/2025) 12.30 மணியுடன் மூடப்பட்டுள்ளதால் அதிகளவான மக்கள்வங்கிக்கு வந்து திரும்பிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

2024 ஆம் ஆண்டின் இலாபத்தினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை வங்கியின் பணிப்பாளர் சபையினால் வழங்குவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட ஊக்கிவிப்பு கொடுப்பனவிற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் வழங்கப்படுதல் தாமதமாக்கப்படுவதன் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையால் எமது வங்கி ஊழியர்கள் 11 4.2025 இன்று 12:30 மணியுடன் கருமைப்பீடச் சேவைகளில் இருந்து விலகுவதாக அறிய தருகிறோம்.

வங்கியின் பெறுமதி மிக்க வாடிக்கையாளர்களான உங்களுக்கு இதனால் ஏற்படும் அசெளகரியங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கவலை அடைகிறோம் என்று அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here