உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தமது மேயர் வேட்பாளரை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தமது செயற்குழு அடுத்த வாரம் மேயர் வேட்பாளர்களை தீர்மானிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டாளர் சாகல ரத்நாயக்க இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடவிருந்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில், 13 உள்ளூராட்சி அமைப்புகளிலும் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here