Sunday, June 7, 2026
No menu items!

ஐக்கிய தேசியக் கட்சி

ரூபாவின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் குறித்து ஐ.தே.க எச்சரிக்கை

கடந்த 20 மாதங்களில் இலங்கை ரூபாவின் மதிப்பு பெருமளவு குறைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) எச்சரித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான மதிப்பு சுமார் 292 ரூபாலிருந்து 354 ரூபாவாக குறைந்துள்ளது. கடந்தகால பொருளாதாரக் கொள்கைகளைத் தொடராமை மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பை உருவாக்குவதற்கான தெளிவான திட்டம் இன்மையே இதற்கு காரணம் என...

நவம்பர் 21-ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக பேரணி – SLPP மற்றும் UNP தலைவர்கள் ஆலோசனை!

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நவம்பர் 21-ஆம் திகதியிலான எதிர்ப்புப் பேரணி தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தலைவர்களுக்கிடையில் நேற்று (நவம்பர் 12) ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி, இந்தக் கூட்டத்தில் பேரணியின் நோக்கங்கள், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு குறித்து...

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டல் துணைச் செயலாளர் நாயகமாக ஹரின் பெர்னாண்டோ பதவியேற்பு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அரசியல் அணிதிரட்டல் துணைச் செயலாளர் நாயகமாக அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார். சிறிகொத்தா கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். எதிர்வரும் தேர்தல்களை முன்னிட்டு கட்சித் தலைமையை மறுசீரமைத்து, அடிமட்ட அரசியல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் ஐக்கிய தேசியக்...

அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்!!

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதே ஹரின் பெர்னாண்டோவின் முக்கிய பொறுப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்சியினால் ஏற்பாடு...

UNP, SJB உடன் கலந்துரையாட குழு நியமிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடன் கலந்துரையாடுவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழுவில் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் ஜனாதிபதி வழக்கறிஞர் ரோலண்ட் பெரேரா இடம் பெற்றுள்ளனர். UNP, இலங்கையின் ஜனநாயக பல கட்சி அமைப்பைப் பாதுகாக்க அனைத்து...

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி; சஜித் பிரேமதாச!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைமையிலும் வழிகாட்டுதலிலும் ஒரு கூட்டு அரசியல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பொறிமுறையை, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்: “நாட்டின் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான, ஜனநாயக மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே இந்த...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று!!

இன்றைய தினம்(20) ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. முன்னாள் ஜனாதிபதி மற்றும் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளதாக கட்சி அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த விழாவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ரணில் விக்ரமசிங்க!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறினாலும், நெருக்கமான மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த காலகட்டத்தில் அவரது குடும்ப மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணிப்பார்கள்...

ரணில் விக்ரமசிங்க கைது விவகாரம்: எதிர்க்கட்சிகள் ஒன்றுகூட தீர்மானம்!

எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் கட்சி பேதமின்றி இன்று (26) கொழும்பில் ஒன்றுகூட முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்குறித்து விவாதிக்க, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) விசேடக் கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும்; ரணில் விக்ரமசிங்க!

தனது கட்சியினரும், சில முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்களும், இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருந்து ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய போராட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சென்றிருந்த மூத்த அரசியல்வாதிகளிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளுக்குள்ளும் ஒற்றுமையை வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க,...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img