வியாபார சான்றிதழ் பெறாத நிதி நிறுவனங்கள் மற்றும் அதிகூடிய வட்டியை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் இன்றைய தினம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களின் அதிரடி நடவடிக்கையின் கீழ் பூட்டப்பட்டது.
இது தொடர்பில் தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மாதங்களில் 02 தடவைகள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் நுண் கடன் நிறுவனங்களின் முகாமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வியாபார சான்றிதழ் மற்றும், அதிகூடிய வட்டியை வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் பூட்டப்பட்டதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.








