பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது கியூ.ஆர் முறைமை கருத்தில் கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே ராஜகருணா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் வாகன இலக்க தகட்டின் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமை கவனத்தில் கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.







