ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கமைய முன்னெடுக்கப்படும் சாட்சியங்களை சேகரிக்கும் திட்டத்தை ஏற்க போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை மிகவும் மோசமான செயற்பாடு என இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் அது உண்மையின் அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.








