ஐ.பி.எல் நிறுவனர் லலித் மோடியின் கடவுச்சீட்டை இரத்து செய்ய வானாட்டு தீவு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
ஐ.பி.எல் முறைகேட்டு சம்பவத்தில் தொடர்புடைய லலித் மோடி வானாட்டுத் தீவில் தற்போது தஞ்சமடைந்துள்ளார்.
லலித் மோடி தனது இந்திய கடவுச்சீட்டை ஒப்படைக்க லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் லலித் மோடிக்கு தற்போது இந்த புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.







