ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் செய்யும் விலையை அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அதற்காக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் இணைந்து கொண்டனர்.

விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதன்போது கருத்து தெரிவிக்கையில்;

“நாங்கள் உலர் நெல்லினையே வாங்குகிறோம். நாடு நெல்லினை சந்தைப்படுத்தல் வாரியம் ரூ. 120க்கு கொள்வனவு செய்யவுள்ளோம்.

“சம்பா நெல் ஒரு கிலோ ரூ.125க்கு கொள்வனவு செய்யவுள்ளோம்.

“கீரி சம்பா நெல் ஒரு கிலோ ரூ.132 இற்கு கொள்வனவு செய்யவுள்ளோம்.

“அரிசியின் விலை குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம். விவசாயியின் உற்பத்திச் செலவுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here