Monday, June 8, 2026
No menu items!

நெல்

2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்!

2025 சிறுபோகத்திற்கான அரசின்  நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2025.09.15) அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் 43,891 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் தற்போது அறுவடை இடம்பெற்று வரும் பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும்...

நெல் விலை நிர்ணயம் – விவசாயிகள் போராட்டம் தேவையில்லை: நாமல் கருணாரத்ன!

நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். மொனராகலையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், நெல் களஞ்சியசாலைகளில் உள்ள நெல் விடுவிக்கப்படும் என்றும், நெல்லுக்கான உரிய விலை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பெரும்போகத்தில் விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்பதால், போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை...

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நெல்லின் அளவைக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்!

நெல் கொள்வனவு செய்வதற்காக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் வாங்கப்படும் நெல்லின் அளவைக் கண்காணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சில நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் வாங்குவதற்காகப் பெற்ற கடன்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதால் இது குறித்து ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் நெல் வாங்குவதற்காக...

அரசாங்கத்திற்கு  சிறியளவிலான நெல் தொகையை வழங்கும் விவசாயிகள்..!

விவசாயிகள் தற்போது அரசாங்கத்திற்கு சிறிய அளவில் நெல்லை வழங்கி வருவதாகவும் அறுவடை செய்யப்படும் பிரதேசங்களில் உள்ள நெல் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார். சந்தையில் இன்னுமும் குறைந்த அளவிலேயே நெல் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் அதிகளவு நெல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், அதற்குள் சபைக்கு நெல் கையிருப்பு...

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் அதிகரிக்கும் வீதி விபத்து!

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில்  எவ்வித பாதுகாப்பு சமிக்ஞை இன்றி நெல்லை உலரவிடுகின்றனர். இதனால் விபத்து சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் பாதுகாப்பு சமிக்ஞை இல்லாமல் நெல் உலரவிடப்பட்டதனால் கடந்த இரு தினங்களில் இருவர் விபத்துக்குள்ளாகி...

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்காத விவசாயிகள்..!

விவசாயிகள் எவரும் இதுவரையில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்கவில்லை என நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்லந்த தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் அறுவடையை ஆரம்பிக்காத காரணத்தினால் இவ்வாறு களஞ்சியசாலைகளுக்கு நெல் தொகை கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் 10 நாட்களுக்குள் குறித்த...

குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் – நாமல் கருணாரத்ன..!

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக்கி தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில், "நாங்களும் இதைப் பொறுப்புடன் சொல்கிறோம்.  நாங்கள் விவசாயிக்கு இங்கு மிகவும் நியாயமான விலையைக் கொடுத்துள்ளோம். அதேபோல அரசின் களஞ்சியசாலைகளுக்கு கொள்வனவு...

அதிக விலையில் நெல் கொள்முதல்!

நாட்டின் முக்கிய தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்கனவே நெல்லை கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையை விட 5, 6 ரூபாய் அதிக விலையில் நெல்லை கொள்முதல் செய்வதாக அறியக்கிடைத்துள்ளது. அதிக விலைக்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விட 5,...

ஒரு கிலோ நெல்லுக்கான விலை அறிவிப்பு!

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் செய்யும் விலையை அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, அதற்காக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர்...

நெல்லுக்குரிய நிர்ணய விலை தீர்மானிக்கப்பட வேண்டும் – அடைக்கலநாதன் எம்.பி..!

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img