காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (24/03/2025) வவுனியாவில் நடத்தப்பட்டது.

வவுனியா, வைத்தியசாலை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம் யாழ். வீதி, வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி, கண்டி வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, பசார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக சென்று வைத்தியசாலையை அடைந்தது.

இதன்போது காச நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டதோடு, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த ஊர்வலத்தில் தாதியர்கள், நூற்றுக்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here