காலி – மாபலகம வீதியில் கும்புக்கஹ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டாார் சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் அதிக குடிபோதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.








