இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 290 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதய குமார அமரசிங்க மாதாந்தம் இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், சிறுவர்கள் தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் தொடர்பான முறைப்பாடுகளில் இரண்டாவது அதிகளவான முறைப்பாடுகள் கம்பஹா மாவட்டத்திலிருந்தும் மூன்றாவதாக குருநாகல் மாவட்டத்திலிருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here