கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான ரயிலை இன்று (2) முதல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.

காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் இரவு 11.38 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்தை அடைந்து அன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.19 மணிக்கு கோட்டை நிலையத்தை வந்தடையும்.

பத்து முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட இந்த நகரங்களுக்கு இடையேயான ரயிலின் ஒரு பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் 3,200 ரூபா என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here