அநுராதபுரம்  திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த இரு கைதிகள் நேற்று (29)  தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த இரு கைதிகளும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட சிறைச்சாலை சிற்றூண்டிச்சாலையில் வேலை செய்து வந்துள்ளனர்.

இருவரும் தங்களின் சிறைச் சீருடைகளை களைந்துவிட்டு சிவில் உடைகளில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்ய அநுராதபுரம் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளில் ஒரு கைதி அநுராதபுரத்திலுள்ள ஸ்ரவஸ்திபுரயைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய கைதி  களனியையும் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here