அம்புலுவாவ மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணம் செல்வதற்கு தவறுதலான பாதையினூடாக மலையேறி சென்றுகொண்டிருந்த நபர் மீது கற்பாறை சரிந்து வீழ்ந்ததில், அந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நான்கு பேர் கொண்ட குழுவினர் மலை ஏறிக்கொண்டிருந்தபோதே, அவர்களில் ஒருவர் கற்பாறை வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தெஹியோவிட்ட முருத்தெட்டுவே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்றும் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டபோது, விபத்துக்குள்ளான நபர் மனைவியிடம் கூறாமல் தனது நான்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here