எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் பகுதியில் இன்று (17) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்ததென்றும் தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து, மக்கள் தங்கள் பணிகளைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குமென்றும் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here