புத்தாண்டு காலத்தில் இயக்கப்பட்ட பேருந்து சேவைகள் தொடர்பாக பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களை வசூலிக்காதது தொடர்பாக 63 முறைப்பாடுகள் கிடைத்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார்.

1955 என்ற துரித இலக்கம் மூலம் குறித்த முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், டிக்கெட்டுகள் வழங்கப்படாதது குறித்தும் முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் கூறிய அவர், புது வருடத்திற்கு பின்னர் அந்த முறைப்பாடுகள் விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here