யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான  மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நேற்று வியாழக்கிழமை (03.10) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மழை காலம் வருவதனால் டெங்கு நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு கலந்துரையாடலில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சமன் பத்திரண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here