Tuesday, April 28, 2026
No menu items!

கலந்துரையாடல்

குருநகர் வலைத் தொழிற்சாலைக்கு யாழ். எம்.பி க. இளங்குமரன் விஜயம் – தொழிலாளர் நலனில் கவனம்!

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் நோக்கம் தொழிற்சாலையின் நடப்பு செயல்பாடுகள், உற்பத்தித் திறன், தொழிலாளர்களின் நல்வாழ்வு மற்றும் தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதாகும். அவர் தொழிற்சாலையில் பணிபுரியும் வலை உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் நிர்வாகப்...

2025 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி, அவற்றைச் செலவிட்ட விதம் மற்றும் முக்கியமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் அமைச்சுக்களின் நிதிசார் மற்றும் பௌதிக முன்னேற்றம் மற்றும் 2025 டிசம்பர் 31 ஆம் திகதி வரை எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல், சுற்றாடல்,...

மன்னாரில் புதிய காற்றாலைத் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை!

மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள காற்றாலைத் திட்டங்களைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் உள்ளக ரீதியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், எதிர்காலத்தில் புதிய காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்காதிருப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல துறை சார்ந்தவர்களுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை நடாத்தி வருகிறது. இந்த நிலையில், மன்னாரில் கனிய மணல்...

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ரகசிய சந்திப்பு – ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் முக்கிய முடிவுகள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்பில் நேற்று (02) இரவு கொழும்பில் உள்ள தனியார் விருந்தகத்தில் சிறப்பு சந்திப்பும் விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்றது. இதில், 25க்கும் மேற்பட்ட...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க வெளியிட்டுள்ள கருத்து!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான நிறுவனங்களின் நிலைப்பாட்டை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி வெளியிட உள்ளதாக பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஹட்டன் தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சம்பள விஷயத்தில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், தற்போது ஒரு நாளுக்கு ரூ.1,350 முப்பதைக்...

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க இன்று அமெரிக்கா புறப்பட்டார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று (செப்டம்பர் 22) உத்தியோகபூர்வ விஜயத்திற்காக அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட பல்வேறு உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும்...

அனலைதீவு, எழுவைதீவு கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல்!

அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளின் கல்வி முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் இன்று (16) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய ஆளுநர், கடந்த காலங்களில் இப்பகுதிகளில் கல்வியை மேம்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார். கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்களை தொழில்முறை ரீதியாகவும்...

சீனத் தூதுவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங்ஹோங்குக்கும் இடையிலான இன்று (12) காலை கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிக்கும் சீனத் தூதுவருக்கும் இடையிலான...

தொடரும் அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு !

அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 19 கோரிக்கைகளை முன்வைத்து, அஞ்சல் தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என...

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை(06) வருகைதரும், சமந்தா ஜாய் மோஸ்டின் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த அரசமுறை விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில்...
- Advertisement -spot_img

Latest News

ஆதாரம் இருக்கும் போது அரசாங்கம் எவ்வாறு மறுக்க முடியும்?நாமல் கேள்வி

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கொடுப்பனவுகளில் உள்ள சிக்கல்களை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு...
- Advertisement -spot_img