தமிழ்ப் பொது கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தரப்பினருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பினர் உள்ளிட்டோர் இணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கியிருந்தனர்.
இந்தநிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ப் பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவது தொடர்பில் இன்றைய தினம் ஆராயப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








