இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் காலி முத்திடல் உட்பட பல பகுதிகளில் அரச தரப்பில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பதாகைகளில் சிங்களம் மற்றும் ஆங்கில் மொழிகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. இதனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.







