முந்தைய அரசாங்கத்தின் போது, அரச சேவையில் உள்ள நான்கு தரங்களைச் சேர்ந்த தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றுவதைத் தடை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை, உயர்நீதிமன்றம் நேற்று (17) செல்லுபடியாகாததென அறிவித்தது.

மேலும், அந்த மனுவை மீண்டும் பரிசீலிக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் யசந்த கோதகொட, ஜனக் டி சில்வா, ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

பொதுச் சேவை ஐக்கிய செவிலியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் ஆனந்த தேரர் தாக்கல் செய்த ரிட் மனுவில், கட்டாய ஓய்வை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. ஆனால், அந்த தடை சட்டத்திற்கு முரணானது என்றும், அந்தத் தீர்ப்பை வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here