புறக்கோட்டையில் உள்ள பழக்கடைகளில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

பழக்கடைகளில் விற்பனை செய்யப்படும் பழங்களின் தரங்களைக் கண்டறிய இந்த சோதனை நடவடிக்கையை நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் முன்னெடுத்துள்ளனர்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினருக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது ஒருசில கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here