தேர்தல்கள் ஆணைக்குழு உண்மையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமானால், அதன் செயற்பாடுகளுக்கு தேவையான நிதி சுதந்திரம் கட்டாயமாக இருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையான அளவிலான அதிகார வரம்பும், நிதி தன்னிச்சையும் இல்லை என்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

“நாங்கள் ஒரு சுயாதீன அமைப்பாக இருந்தாலும், நிதி மற்றும் நிர்வாக சுதந்திரம் இல்லாத நிலையில் செயற்பட வேண்டியுள்ளது. இது எங்களின் முடிவெடுப்புகள் மற்றும் செயல் துரிதத்துக்கு இடையூறாகின்றது. தேர்தல்களின் நேர்மையை உறுதி செய்ய நிதி சுதந்திரம் ஒரு அடிப்படை அவசியமாக இருக்கிறது” என அவர் வலியுறுத்தினார்.

இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் அபேவிக்ரம, மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டு, தேர்தல் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பான தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here