ஜனாதிபதி தேர்தலுக்காக பணிபுரியும் அரச அதிகாரிகள் மற்றும் அதற்காக பயன்படும் அரச வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L.ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் தேர்தலுக்கு பணிபுரியும் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் பங்குபற்றக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்பில் உரிய ஆவணங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.








