எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு இடம்பெறவுள்ள தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்படும் தகவல்களுக்கு அமைய உரிய பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here