அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

பயணிகளை ஏற்றுவதற்கு முண்டியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த நிலையில் இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

அத்துடன், தொடரும் இம்முரண்பாட்டை தீர்த்து பயணிகள் பாதுகாப்பாக பொது போக்குவரத்தினை பயன்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

மேலும், இந்த போட்டி காரணமாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here