இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறித்து நாடாளுமன்றில் அவசரகால விவாதம் ஒன்றை நடத்த, மற்ற கட்சித் தலைவர்களுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுடன் இன்று (22) இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
“ரூபாய் பெரும் அழுத்தத்தில் உள்ளது. மேலும், நம்மிடம் தெளிவான பதில்களோ திட்டங்களோ இல்லை,” என்று எதிர்க்கட்சித் தலைவர் தமது ‘X’ தள கணக்கில் பதிவிட்டுள்ளார்.
நிலைமை மோசமடைவதற்கு முன்பு, பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலான உடனடி நடவடிக்கையும் தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.








