நானுஓயா பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (20) காலை மகளிர் மற்றும் சிறுவர் – துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் ,உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் தனியான அறை ஒன்று ஒதுக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.என் ஏகநாயக்க மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் குறித்த மகளிர் மற்றும் சிறுவர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறந்து வைக்கப்பட்டது.








