இலங்கையின் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் நாட்டின் திரைப்பட விநியோக முறையை மாற்றியமைக்க நிபுணர் குழுவொன்றை நிறுவியுள்ளது.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தீபால் சந்திரரத்ன, திரைப்படத் துறையின் அனைத்துப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவின் முடிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, திரைப்படத் துறையில் சாத்தியமான கொள்கை மாற்றங்கள் மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கு வழி வகுக்கும்.
இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபன சட்டத்தில் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.








