நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை நேற்றுக் காலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த, பிறந்து மூன்றரை மாதங்களேயான சிவதாசன் றக்ஸ்மி எனும் சிசுவே  இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்றுக்காலை 6 மணியளவில் பால் குடித்துக் கொண்டிருந்தபோது குழந்தை மயக்கமடைந்துள்ளதையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிமோனியாவே குழந்தையின் இறப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here