ஆராச்சிகட்டுவ, வைரம்கட்டுவ பகுதியில் தனது வீட்டிற்கு அருகில் தோண்டப்பட்ட நீர் நிரப்பப்பட்ட குழியில் விழுந்து ஒரு சிறு குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (06) பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தை வைரம்கட்டுவ பகுதியில் வசிக்கும் 1 வயது சிறுவன்.
சடலம் சிலாபம் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஆராச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








