ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா எதிர்வரும் செப்டம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக பிரதமர் அலுவலகத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மற்றும் “எல்டிபி மாறும் என்பதைக் காண்பிப்பதற்கான மிகத் தெளிவான வழி, நான் பதவி விலகுவதுதான்.” எனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








