ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நேற்று(20) ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 21 மாணவர்கள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாத்தறை பிரதான நீதவான் சதுரய திசாநாயக்க அவர்கள், மாணவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய மோதலில் பல்கலைக்கழக சொத்துகள் சேதமடைந்ததாகவும், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








