T56 துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் கலிங்கவில பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய வெலிகந்த கடையொன்றை நடத்துபவர் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 11ஆம் திகதி வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்ததுடன், சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 56 துப்பாக்கி, தோட்டாப் பை மற்றும் 18 ரவைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது அவர் வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில் மற்றுமொரு T56 துப்பாக்கி 2 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தகவலின் அடிப்படையில் கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு இன்று (18) வெலிஓயா பிரதேசத்திற்குச் சென்று சந்தேகநபரை டி-56 துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய பை மற்றும் 11 உயிருள்ள தோட்டாக்களுடன் கைது செய்துள்ளனர்.
இந்த துப்பாக்கி வேறு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.








