பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெலும் ஜயசுமன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பேஸ்புக் ஊடாக வடக்கில் மாவீரர் வைபவங்கள் நடைபெறுவதாக பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பிலே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








